Sunday, July 26, 2009

டுமாங்கி கவிதைகள் - 1

அப்படி பார்க்காதே..
சற்று முன்
அண்டார்டிகாவில் இருந்து
எடுத்த பனிக்கட்டியை
சகாராவில் வைத்தது
போல் உருகிவிடுகிறேன்
====
இந்த உலகத்திற்கே
தெரியாத
உலக அழகி
நீ..
====
பக்கத்து வீட்டு
குட்டி பெண்ணை
பார்த்து
கண்ணடித்த நம்
மகனை அடித்தாய்..
“அப்பா மாதிரி இந்த வயசுலேயே
எல்லா வேலையும் பண்ணுது”
என திட்டிக்கொண்டே..
====
உன்னோடு நடக்கையில்
எதிரே வந்த பெண்ணை
பார்க்க..
நீ என்னை கிள்ள..
“ஒன்னும் இல்ல அந்த‌
பொண்ணு உன்ன மாதிரியே
இருந்துச்சு”
என நான் சமாதானப்படுத்த..
“அரசியல்ல இதெல்லாம்
சகஜமப்பா” என என்
அலைபேசியின்
ரிங்டோன் ஒலித்த‌து…
====
“போடா” எனும் வார்த்தையை
எத்தனை விதமாய்
கூறலாம் என
உன்னிடத்தில் தான்
அறிந்துகொண்டேன்..
====
Love you
என்று நீ
உச்சரிக்கும் நிமிடங்களில்
உன் மேற்பற்களின்
கடிபடும் கீழுதடாக
மாறிவிட துடிக்கின்றேன்.
====
என்னை பரிசோதித்த
டாக்டர் சொன்னார்
“stethoscope-இல் ஒரே
இரைச்சல் சத்தம்” என்று.
அவருக்கு தெரியாது
அது என் இதயம் அழும்
ஓசை என்று..

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment