Saturday, July 11, 2009

டாவின்சி தோற்றுப்போனான் என்னிடம்..

உன் மேல் விழும்
என் நிழலில்
தெரிகிறதா
என் காதலின் அடர்த்தி?
=====
தேவதைகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவள் நீ..
அத்தேவதைகளால்
வரம் கொடுக்கப்பட்டவன் நான்..
=====
நீ சாப்பிட்டு
கொண்டிருந்த
ஐஸ்க்ரீமை
நான் பிடுங்க
நீ செல்லமாக சிணுங்க
நம் காதல் கனலில்
உருகி வழிந்தோடிற்று
ஐஸ்க்ரீம்..
=====
காதலை தவிர
உளறுவதற்கு
எதுவுமில்லை என்னிடம்..
=====
வெகுநாள்
புத்தகத்தின் இடையே
வைக்கப்பட்ட
இலையின் நரம்புகளை
வருடும்போதெல்லாம்
ஒருமுறை உன் கூந்தல்
என் முகத்தினை தழுவி செல்கிறது..
=====
என்னை தேடும்போது
உன் விழிகள்
காற்றில் போடுகின்றன
எண்ணற்ற
கோலங்களை..
=====
தினம் தினம்
ஒரு பொட்டு வைக்கிறாய்
ஒரு நாள் பாம்பு பொட்டு
மறுநாள் பிறைநிலா பொட்டு
மற்றொரு நாள் பூ பொட்டு
மாலை நீ அவற்றை
எடுத்துவைக்க
அதை நான்
தனியே சேகரித்து
உன் முகத்தினைபோல்
வெள்ளை காகிதத்தில்
ஒட்டிவைக்கிறேன்.
உன் அழகின் மிச்சமும்
அவற்றில் ஒட்டி இருப்பதால்
டாவின்சி தோற்றுப்போனான்
என்னிடம்..

3 comments:

ஊர்சுற்றி said...

நல்லாத்தான் எழுதுறீங்க... கொஞ்சம் சந்திப்பிழைகள் இருக்கின்றன.

வேட்டையனுக்கு என்னாச்சு,

அடுத்து ஒண்ணியும் காணும். ?!!!

arune said...

nalla iruku vettaiyan.

வேட்டையன் said...

நன்றி ஊர்சுற்றி. சந்தி பிழைகள் வராதவாறு பார்த்துகொள்கிறேன்

நன்றி அருண்

Post a Comment